Breaking News

இத்­தாலி விபத்தில் இலங்­கையர் பரிதாபமாக பலி.!

இத்­தாலி வெரோனா நக­ருக்கு அண்­மையில் அமைந்­துள்ள வீதியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பகல் நடை­பெற்ற விபத்தில் இலங்­கை­ய­ரான புத்­தளம், நாத்­தாண்­டியாவைச் சேர்ந்த ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வெரோனா நகரில் தொழில் செய்யும் நாத்­தாண்டியா பிர­தே­சத்தைச் சேர்ந்த துஷார சஞ்­ஜீவ பெரேரா (வயது 40) எனும் திரு­ம­ண­மான ஒரு­வரே இவ்­வாறு விபத்தில் உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

விபத்தில் உயி­ரி­ழந்த நபர் செலுத்திச் சென்ற வாகனம் அதி­வேக நெடுஞ்­சா­லையில் இயந்­திரக் கோளாறு கார­ண­மாக இடை­ந­டுவில் நின்­றுள்­ளதால் வாக­னத்­தி­லி­ருந்து உயி­ரி­ழந்த நபர் இறங் கிச் செல்ல முற்­பட்ட போது பின்னால் வந்த வாக­னத்தில் மோதி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வி­பத்தில் பலத்த காயங்­க­ளுக்குள்­ளான நபர் அவ­சர அம்­பியூலன்ஸ் மூலம் வெரோனா பொர்கோ ட்ரென்தோ வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்ட போதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் வெரோனா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.