Breaking News

"பயங்கரவாதத்தின் விளைவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனா்."

அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

பயங்கரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. அதிலொன்று தான் அரச பயங்கரவாதம். கடந்த காலங்களில் அரச பயங்கரவாதத்தின் ஊடாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட் டனா்.

அத்தகைய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காப்பு நிலையைக் கையாண்டவர்கள் மீது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிர யோகித்து, பயங்கரவாத முத்திரையைக் குத்தியது.

அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர். கடந்த 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களை ஒடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவளித்தவர் களில் ஒருவர் தான் அத்துரலியே ரத்ன தேரர். அரச பயங்கரவாதிகளுக்கு எதி ராக அவர் வாய் திறக்கவில்லை.

அப்போது அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்துவிட்டு, இப்போது நடை பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறுகின்ற தகுதி அவருக்கில்லை எனத் தெரி வித்துள்ளாா்.