உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற பூஜித் ஜயசுந்தர
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நடை பெற்ற குண்டுதாக்குதலை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.