Breaking News

சீனாவில் பாரிய இரு நிலநடுக்கம்:11 பேர் பலி,122 பேர் காயம்

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டுள்ளது. நேற்றய முன் தினம் இரவு முதல் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியது. இந்நிலையில் இரண்டாவது நில நடுக் கம் நேற்று காலை 5.2 ரிச்டர்ஆக பதி வாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் உடைந்து விழுந்ததில் இடிபாடுகளுக் குள் சிக்கி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 122 பேர் படுகாயங்க ளுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
சுமார் 30 நிடம் வரை இந்நில நடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.