Breaking News

வாய்ப்பை பயன்படுத்துமா பங்களாதேஷ்?

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கா னிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாக வுள்ளது. பங்களாதேஷ் அணி இது வரை 6 போட்டிகளை சந்தித்து 2 இல் வெற்றியும், 3 தோல்வியும், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 5 புள் ளிகளுடன் பட்டியில் 6 ஆறாவது இடத்தில் உள்ளது.

இந் நிலையில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கடப்பாட்டில் பங்களா தேஷ் அணி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இது வரை 6 போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது. எனினும் ஒரு வெற்றியையாவது பெற்று நாடு திரும்ப வேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் இன்றைய தினம் பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த வுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் நேரு க்கு நேர் மோதவுள்ளன.