Breaking News

போதைப் பொருள் வாரம் இன்றுடன் நிறைவு.!

தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தின் இறுதித் தினம் இன்றாகும். ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள் ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

போதையிலிருந்து சுதந்திரமான இல ங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கடந்த 23ம் திகதியிலிருந்து முன் னெடுக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

அதன் பிரதான ஒன்றுகூடல் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. ஜூன் 26ம் திகதி பெயரிடப்பட்டிருந்த போதைப் பாவனை மற்றும் சட்ட விரோத கடத்த லுக்கு எதிராக சர்வதேச தினத்திற்கு இணைவாக ஜனாதிபதியின் வழிகாட் டலின் கீழ் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழிற் கல்வி பெறும் மாணவ்ர்கள் உள்ளிட்ட பொதுமக்களை இலக்காக கொண்டு நாடளா விய ரீதியில் தேசிபோதைப் பொருள் ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை போதைப் பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, அபாய கரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை மற்றும் இலங்கை பொலிஸ் ணெநை்து முன்னெடுக்கும் போதைப் பொருள் பரவல் தொடர்பிலான தேசிய கருத்துக்கணிப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இன்றைய ஒன்றுகூடலில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு அலுவலகம் தொடர்பில் மக்கள் நம்பகத்தன்மையை ஸ்தாபிப்பதற்கு வழக்குகள் முடிவடைந்த 1695 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் பகிரங்க மாக அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை பல்வேறு வகை 24818 கிலோ 395 கிரேம் 767 மில்லி கிரேம் விஷ போதைப் பொருட்கள் கைது செய்யப்பட்டுள்ளன.