Breaking News

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

உள்நாட்டுச் செய்திகள்
  • அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர் பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொண்டு வரவுள் ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
  • அமெரிக்காவின் மற்றுமொரு சரக்கு விமானம் கட்டுநாயக்க சர் வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து பின்னர் புறப்பட் டுச் சென்றுள்ளது. 
  • அமெரிக்காவில் நடைபெறும் சர் வதேச சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை யின் சாரணர்கள் குழுவிற்கு தேசியக்கொடி உத்தியோகபூர்வமாக கைய ளிக்கப்பட்டது. 
  • எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை வரையிலான கடற் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளி மண்ட லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • உனவட்டுன, ரூமஸ்ஸல பகுதியில் கற்பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது இளைஞர்கள் நால்வர் கடலில் வீழ்ந்துள்ளனர். 
  • கந்தபுராணத் தொடர்புடைய தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆல யத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட வேல்பவனி இனிதே நிறைவடைந் துள்ளது. 07. மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையிலிருந்து விலகி, தபால் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள் ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள் 
  • மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக ஈரானிய, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக, பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரி வித்துள்ளார். 
  • நேபாளம் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ் ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
விளையாட்டுச் செய்திகள்
  • உலக சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்கள் அந்நாட்டு பிரதமர் தெரேசா மேயை சந்தித்துள்ளனர். 
  • இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இத் தடவை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தனதாக்கியுள்ளார். 
  • உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்த நியூஸிலாந்து, தோல்விக்கு தகுதியான அணி அல்ல என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.