Breaking News

தயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையாகா விடின் சட்ட நடவடிக்கை - சரத்பொன்சேகா

குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனா திபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார் கள்.

சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகா தெரிவித்துள்ளாா்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் மீது போலியான குற்றச் சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற் றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளாா்.

குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனா திபதி பாதுகாப்பு பிரதானி என்ற வகையில் நிச்சயம் சாட்சியமளிக்க வேண் டும். பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன் னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்படுவார்கள். இதன் பின்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு பாராளுமன்றத்திற்கு உரிய அறிக்கை சமர்ப்பிக்குமெனத் தெரிவித்துள்ளாா்.