Breaking News

சபா­நா­யகர் தலை­மையில் இன்று கட்சி தலைவர்கள் சந்திப்பு.!

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இன்று காலை கட்சித் தலைவர்கள் சந்திப்பு  நடைபெற­வுள்­ளது.

எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்ள உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள காணி சிறப்பு ஏற்­பா­டுகள் சட்டம் தொடர்பில் இக் கூட்­டத்தில் ஆரா­யப்­படும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஸ் குண­வர்­தன தெரி­வித் துள்ளாா்.

 மேலும் தெரி­விக்­கையில்,

நாளை பாரா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் இன்று காலை சபா­நா­யகர் தலை­மையில் கட்சி தலைவர் கூட்டம் நடைபெற­வுள்­ளது. காணி சிறப்பு ஏற்­பாடு சட்டம் தொடர்பில் இது­வ­ரையில் நீதி­மன்றில் பல மனுக்கல் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் இந்த சட்டம் தொடர்பில் பாரா­ளு­மன்ற விவாதம் இடம்­பெ­று­வது பொருத்­த­மற்­றது. கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை நடத்­து­வ­தற்­கான உரிய காரணம் இது­வ­ரையில் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நாளை எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ சார்பில் ஒரு சில விட­யங்­களை முன்­வைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நாளை மறு­தி­னமும் அதற்கு அடுத்த நாளும், விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ள தற்போது தீர்மானிக் கப்பட்டுள்ளது.