Breaking News

பரீட்சைக்காக அழைத்துச்சென்ற தந்தையும் மகளும் விபத்தில் பலி.!

வேயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வேயாங்கொட - வந்துரவௌ பகுதி யில் இன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழு ம்பு நோக்கி சென்ற புகையி ரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதா லேயே விபத்து ஏற்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனா்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வய துடைய தந்தையும், 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே விபத்து நடைபெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளாா்.

சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேல திக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.