Breaking News

சிறைக்கைதி தப்பியோட்டம் ; பொலிஸார் தேடுதல் வேட்டையில்...!

வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில் சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, ஹெரோயின் கடத்திய குற் றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்த அப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப் படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.

வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பல மணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை முன்னெடுத் துள்ளனா்.

எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் பின் னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.