Breaking News

225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லையென்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் ; சீ.பீ.ரத்நாயக்க

இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை பகுதியில் நடை பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கையில் பாராளுமன்றத்தில் அங் கம் வைக்கின்ற 225 உறுப்பினர்களும்,

இந்த முறைபாட்டினை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உத்தி யோகத்தர்கள் உள்ளனர். அதேபோல் பொலிஸார் இருக்கின்றனர். பாராளு மன்ற அமர்வு நடைபெறுகின்ற போது ஊடகவியலாளர்கள் வருவார்கள்.

எனவே இவர்கள் அனைவரையும் கனக்கெடுப்பு செய்தால் 1500க்கும் மேற் பட்டவர்களுக்கு உணவு மற்றும் தேனீர் என்பன வழங்கபட வேண்டிய தேவை இருக்கிறது. இவர்களுக்கு காலை மதியம் இரவு நேரத்திற்கான உணவும் தேனீ ரும் வழங்கப்படுகின்றது.

இதற்கான அனைத்து செலவுகளையும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்க ளுக்கு மாத்திரம் அல்ல செலவு செய்யப்படுகிறது, ஏனைய உத்தியோகத்தர்க ளுக்கும் சேர்த்தே செலவு செய்யபடுவதாகத் தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் 1500 உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இதற் கான செலவினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்துவது பிழையான விடயம், சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இவ்வாறு தான் செலவு செய்யப்படுகிறது என்ற விடயத்தினை இந்த நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண் டும். பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதத் தில் பத்து நாட்கள் மாத்திரமே இருப்பார்கள்.

இவ்வாறு வீண் விரயம் செய்வதாகக் கூறினால் நாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக மக்கள் நினைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளாா்.