Breaking News

மன்னாரில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மக்களை சந்தித்த மக்கள் சக்தி குழு.! (காணொளி)

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளாங் குளம் – சேவா கிராமத்தில் யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட 45 குடும்பங்க ளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின் றனர். தோட்டப் பயிர்செய்கையை நம்பி வாழும் இந்த மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர் நோக்கியுள்ளனர்.

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காயா நகர், பெரிய மடு, ஈச்சிலவக்கை பகுதிகளுக்கு சென்ற மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினருக்கு மக்களின் பல பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்தது.

இங்குள்ள மக்கள் நீண்டதூரம் சென்று குடிநீரினைப் பெற்றுக்கொள்வதுடன், காட்டு யானைகளின் அச்சுறுத்தலையும் சந்தித்தவாறுள்ளனா்.