Breaking News

கிளிநொச்சி - ஜெயந்திநகரில் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகனும்..!

கிளிநொச்சி பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள் ளனா்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட் பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேயே இவ்வாறு தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள்ளே சடல மாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம் பவம் நேற்றிரவு நடைபெற்றிருக்கலா மென சந்தேகம் எழுந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதுடைய விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் முன்னெடுத் துள்ளனா்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின் னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோத னைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.