Breaking News

பிரதமர் ரணில் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயமாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுன்னா கம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளாா். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல தரப் பினர்களையும் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் திங்கட்கிழமை சுன் னாகம் ஸ்கந்வராதோய கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, அப் பாடசாலையில் 5.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக் கப்படவுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத் துள்ளாா்.

இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராச, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.