Breaking News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சி யில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு மக்கள் கவன ஈர்ப்பில் ஈடுபட்டதுடன், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவன யீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.


தாங்கள் தங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவராலும் கைவிடப்பட்டவர்களாக இருப்பதாகவும், தங்களுக்கான நீதி கிடைப்பதற்கு எவரும் இதய சுத்தியோடு செயற்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.