Breaking News

மண்டியிடாத மாவீரன் - சேகுவேராவின் பிறந்த தினம் இன்று. (14.06.2020)

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா. 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார் இவர்


சேகுவேராவின் பிறந்த நாளில், அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்...

➤ 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா.

➤ 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES AIRES பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார் சேகுவேரா.

➤ 1950-ல்  அர்ஜெண்டினாவின் கிராமப்புற பகுதிகளில் 4,500 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

➤ 1951-ம் ஆண்டில், தென்அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, ஏழ்மைநிலை மற்றும் மோசமான பணி சூழல் சேகுவேராவை வெகுவாக பாதித்தது. மனம் தளராத சேகுவேரா 1952-ல்- பெருநாட்டில் தங்கி தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

➤ 1954-ம் ஆண்டு, தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஏழ்மை நிலைக்கு முதலாளித்துவ அரசாங்கங்களே காரணம் என முடிவுக்கு வந்தார் சேகுவேரா.

➤ இந்த நிலையில், கம்யூனிஸத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

➤ இதையடுத்து, கவுதமாலா நாட்டில் நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கேற்க தொடங்கினார் சேகுவேரா.

➤ கவுதமாலா மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் ஜக்கோபா அர்பென்சை ராஜினாமா செய்ய வைத்தது. இதையடுத்து, இடதுசாரி அரசாங்கங்களுக்கு அமெரிக்கா முக்கிய எதிரி என்ற முடிவுக்கு வந்தார் சேகுவேரா.

➤ 1955-ம் ஆண்டு, மெக்சிகோவில் ஃபிடல் மற்றும் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசினார்.

➤ கியூபாவை ஆட்சி செய்து வந்த சர்வாதிகார அரசை கவிழ்க்க போராடி வந்த புரட்சி படையில் சேகுவேரா இணைந்து செயல்பட்டார்.

➤ 1956-ல் சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள் உட்பட 82 புரட்சி படையினர்  கியூபாவை அடைந்தபோது தாக்குதலுக்கு ஆளாகினர்.

➤ இதில், சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள் மற்றும் சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர்

➤ 1958-ம் ஆண்டு, சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள், கியூபாவில் நடந்த வந்த சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்தனர்

➤ 1959-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவின் குடியுரிமை பெற்றார்.

➤ 1960-ல் கியூபாவில் நடந்த புரட்சி மார்க்ஸிஸ்ட் புரட்சி என முழக்கமிட்டார் சேகுவேரா.

➤ கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சேகுவேரா.

➤ 1963-64-ல் ஐநா.சபையில் சோஷியலிச புரட்சி பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் சேகுவேரா.

➤ 1965-ல் கியூபா அரசில் தான் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்தார்.

➤ புரட்சி தேவைப்படும் நாடுகளில் அதை கொண்டு வருவதே தனது இலக்கு என கூறி கியூபாவை விட்டு வெளியேறினார் சேகுவேரா.

➤ ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கம்யுனிஸ்ட் புரட்சியை கொண்டு வர பாடுபட்டார் சேகுவேரா.

➤ புரட்சி நடவடிக்கைக்காக சேகுவேராவை கைது செய்ய ஆப்பிரிக்காவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை முறியடித்து 1966-ல் ஆப்பிரிக்காவிலிருந்து தப்பித்து கியூபா வந்தார் சேகுவேரா

➤ பின்னர், மீண்டும் தென்அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

➤ பொலிவியாவின் புரட்சி படையில் சேர்ந்தார் சேகுவேரா

➤ 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பொலிவிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் சேகுவேரா.

➤ 1967-ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி 9 முறை சுடப்பட்டு சேகுவேரா கொல்லப்பட்டார்.

சேகுவேராவை பற்றிய THE MOTORCYCLE DIARIES என்ற திரைப்படம், கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

புரட்சியின் மாபெரும் அடையாளமாக இன்று வரை கொண்டாடப்படுகிறார் சேகுவேரா!