Breaking News

தேர்தல் ஆணைக்குழு நாளை கூடுகிறது !

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று நாளை செய்வாய் கிழமை (16.06.2020) இடம்பெறவுள்ளது. 

ஆகஸ்ட் 05ம் திகதி தேர்தல் நடைபெறுவது குறித்து தீர்மானம் எடுத்ததின் பின் நாளை முதல் முறையாக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒத்திகை தேர்தலின் முன்னேற்றம் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் அஞ்சல் மூல வாக்கெடுப்பு தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.