Breaking News

யுத்தத்தின் போது கருணா எங்களுக்கு ஐந்து சதத்திற்கேனும் பிரயோசனமாக இருக்கவில்லை - சரத் பொன்சேகா

கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்த போதிலும், அவரிடமிருந்து இராணுவத்திற்கு ஐந்து சதத்திற்கேனும் பிரயோசனமாக இருக்கவில்லை எனவும் அவர் பிரபாகரனுடன் நீண்ட காலம் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்த போதும் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்தை கூட இராணுவத்தினருக்கு கூறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

நேற்று (24) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

கருணா சரணடைந்து இருந்தாலும் யுத்தத்திற்கு அவரால் ஐந்து சதத்திற்கேனும் பிரயோசனமாக இருக்கவில்லை. அவர் பிரபாகரனுடன் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்த போதும் பிரபாகரனின் இல்லம் அமைந்து இருக்கும் இடம்பற்றியேனும் தகவல்களை வழங்கவில்லை. நாங்கள் அவர்களைக் கைப்பற்றிய பின்னரே. 

அவரால் எங்களுக்கு இராணுவ பலத்தை கொடுக்க முடியவில்லை. சுமார் 150 பேர் அவருடன் சரணடைந்தனர், அங்கு இருந்தது 80 மற்றும் 13 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு போரிட வலிமை இல்லை. அதேபோல் முன்னாள் கருணா அம்மான் இப்போது உங்களுக்கு இப்படி ஒரு கதையை சொல்ல முயற்சிக்கிறார். அப்படியானால், அவருக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், ”என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.