Breaking News

ஐபிஎல் 2020 இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம்: சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2020 ஐ வெளிநாடுகளில் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று பிரபல இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி 20 உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒத்திவைத்தால் ஐ.பி.எல் 2020 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

சலாம் கிரிக்கெட் 2020 இல் பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2020 ஐ, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவமழை ஏற்படக்கூடும் என்பதால் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்றதாக இருக்காது .

இதற்கிடையில், கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு ஒரு அணிக்கு 14 போட்டிகளுக்கு பதிலாக, அணிக்கு 7 போட்டிகளாக குறைக்கபடலாம். அது சாத்தியமானதாக இருக்கலாம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.