Breaking News

கடலட்டை பிடிப்போரை தடைசெய்ய கோரி மருதங்கேணியில் ஆர்பாட்டம்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் கடலட்டை பிடிப்போரைத் தடுத்து நிறுத்துமாறு கோரி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று நண்பகல் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


பலநோக்கு கூட்ரவுச் சங்க மண்டபத்தின் முன்றலிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி தாளையடி - மருதங்கேகேணி வீதி வழியாகப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அரியகுமார் ஆகியோரிடம் மனு கையளிக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு பேரணியில் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன்,சட்டத்தரணிகள் சுகாஸ், மணிவண்ணன், காண்டீபன், பிரதேச சபை தவிசாளர் அரியகுமார், பிரதேச சபை உறுப்பினர்களான தியாகலிங்கம், பிரசாந்தன், பிரேமகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.