Breaking News

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டு அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர் என இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இன்று (15) காலை 8 மணி முதல் இவர்களைக் காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். 

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் இந்திய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். 

புதுடில்லியில் உள்ள இரண்டு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட சில வாரங்களிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர். இரண்டு அதிகாரிகளும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் விசா பிரிவில் பணியாற்றினர். 

நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறை அதிகாரிகள் இந்திய உயர்மட்ட  தூதரைப் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.