Breaking News

யாழ் விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பலி !

பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் மினி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

விபத்தில் பண்டத்தரிப்பு (பெரிய குஞ்சுக்குளம்) பற்றிமா வீதியைச் சேர்ந்த அருளப்பு சிறிசோலோகு (வயது-50 ) பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.