Breaking News

மெக்ஸிகோவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு !

செவ்வாயன்று ஹுவாதுல்கோ ரிசார்ட்டுக்கு அருகே மையமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய மெக்ஸிகோவின் சில பகுதிகளை உலுக்கியது, குறைந்தது நான்கு பேருக்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்தனர். 

உள்ளூர் நேரம் காலை 10:29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவைக் கொண்டிருந்தது மற்றும் ஓக்ஸாகா மாநிலத்தின் பசிபிக் கடற்கரையை மையமாகக் கொண்டது என்று யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பூகம்பத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெக்ஸிகன் மாநிலமான ஓக்ஸாக்காவின் ஆளுநர் அலெஜான்ட்ரோ முராத், டெலிமுண்டோ நியூஸிடம் ஒரு நேரடி நேர்காணலில், க்ரூசிட்டா பகுதியில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தார். 

மெக்ஸிகன் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான பெமெக்ஸ், நிலநடுக்கம் காரணமாக அவர்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று தீப்பிடித்து எரிவதாக ட்வீட் செய்துள்ளார். பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.


மெக்ஸிகோவின் நில அதிர்வு சேவை, ஓக்ஸாக்கா கடற்கரையில் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக கூறியது, சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமான ஹுவதுல்கோ கடற்கரையில் கடல் மட்டம் 60 சென்டிமீட்டர் (2 அடி) உயர்ந்துள்ளது. நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் குடியிருப்பாளர்கள் கடற்கரையிலிருந்து விலகிச் செல்ல பரிந்துரைத்துள்ளது.

"சாத்தியமான பின்விளைவுகள் காரணமாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு நாங்கள் தொடர்ந்து மக்களை கூறியுள்ளோம். என்று ஸ்பானிஷ் மொழியில் லோபஸ் ஒப்ராடோர் கூறினார்.