Breaking News

விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? - சம்மந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வீ.விக்னேஸ் வரன் கூட்டமைப்பை விமர்சிக் கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்? 

இவ்வாறு கேள்வி எழுப் பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். தனியார்  தொலைக்காட்சியயான்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்தவை வருமாரு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை யாரையும் நாம் விலக்க வில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூற வில்லை. 

விக்னேஸ்வரனை நானே அரசியலுக் குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய் கின்றார்? 

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து அவரால் என்ன செய்ய முடியும்? கூட்டமைப்பை விமர்சிப்பவர்களால்  தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 

அவர்கள் ஏன் கூட்டமைப்பில் இருந்து விலகினார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நாம் யாரையும் விலக்க வில்லை. அவர்களை விலகவும் சொல் லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவவுமில்லை - என்றார்.