Breaking News

தனி ஒரு இனம் ஒரு மாகாணத்தை உரிமை கொண்டாடமுடியாது! - பிரதமர் மஹிந்த

'தெற்கில் பிறந்தவர் வடக் கிலும், வடக்கில் பிறந்தவர் தெற்கிலும் வாழ்வதற்கு உரிமை உண்டு. ஒரு மாகா ணத்தை ஒரு இனத்திற்குரியது என்று எவராலும் உரிமைக் கொண்டாட முடியாது. என் பதை மிக தெளிவாகத் குறிப்பிடவேண்டும்.' 

இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

குருநாகல் - தலவத்தேகெதர பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கொண்டாடுவது தவறானதாகும். தெற்கில் பிறந்தவருக்கும், வடக்கில் பிறந்தவருக்கும் சமவுரிமை உண்டு. 

கர்தினால் மல்கம் ஆண்டகை தொடர்பில் எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்து கவலைக்குரியது. மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல்வாதிகளுக்குச் சார்பாக செயற்படவில்லை என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும்.

இலங்கையில் மத பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தொல்பொருள்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்து, கிறிஸ்தவம், மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களின் உரிமைகள், மரபு வழிக் கலாசாரங்கள் பாதுகாக்கப்படும். இது அரசின் பொறுப்பாகும். ஒரு இனத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து தேசியத்தைக் கட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல. ஜனநாயக ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்தே நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும்-என்றார்.