Breaking News

சஜித் நாட்டின் அடுத்த பிரதமர் - அடித்துக் கூறுகிறார் வடிவேல் சுரேஸ்!

சஜித் பிரேமதாச நாட்டின் அடுத்த பிரதமர் என பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். 

பொதுத் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார். 

"பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பையும், கலை – கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்” எனவும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டார்.