Breaking News

கைது செய்யப்பட்ட 12 பொலிஸ் அதிகாரிகளும் விளக்கமறியலில்!

போதைப்பொருள் கடத்திய குற்ற சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 12 அதிகாரிகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். 

போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் 4 அதிகாரிகள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். அப்பணியகத்தின் தலைவரையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.