பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரீட்சைகளின் நிமித்தம் பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறப்பதற்கு அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சகல பல்கலைகழகங்களையும் நாளை முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி குறித்த கல்வி நடவடிக்கைகள் மீள முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழங்களில் உள்ள விடுதிகளின் ஒரு அறையில் ஒரு குழுவினரை மாத்திரம் சேர்ப்பதற்கு பல்கலைகழக உபவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் பதிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பல்கலைகழங்களுக்கு செல்லுவதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அஹதிய்யா பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 6 ஆம் தரங்களுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு இன்றைய தினம் முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் 1 முதல் 5 வரையான தரங்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.








