Breaking News

வயிற்றில் உள்ள குழந்தை ஆணா/பெண்ணா? அறிய மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்த கணவன்!

உத்திரபிரதேசம் நெக்பூர் பகுதியில் வசிப்பவர் பன்னலால்.இவருக்கு திருமணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி 6வதாக கற்பமாகியுள்ளார். ஏற்கனவே ஐந்தும் பெண் குழந்தைகள் என்பதால் தற்போது பிறக்கவிருக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.



இதனால் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய கொடூரத்தனமான முயற்சியை கையாண்டுள்ளார். 

அதாவது மிக கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுத்து மனைவியின் வயிற்றைக் கிழித்துள்ளார். 

கொடூர கணவனின் இந்த செயலால் மனைவி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பன்னலால் கைது செய்யப்பட்டுள்ளார்.