Breaking News

நடிகர் சுசாந்த் சிங் மரணம் - நடிகை ரியா சக்ரபர்த்தி கைது!

நடிகர் சுசாந்த் மரண வழக்கில், 3 நாட்கள் விசாரணைக்குப் பிறகு, நடிகை ரியா போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகர் சுசாந்தை அவரது காதலியும் நடிகையுமான ரியா தற்கொலையில் தள்ளியதாகவும், பணத்தை கையாடல் செய்ததாகவும் சுசாந்தின் பெற்றோர் கூறிய புகாரின் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. 

சுசாந்துக்கு ரியா போதைப் பொருள் வழங்கியதாக புகார் எழுந்ததால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை 6 மணி நேரமும், திங்கட்கிழமை 8 மணி நேரமும், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், ரியா கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.