Breaking News

கொரோனா கடைசி அல்ல! அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்-WHO

கொரோனா மனித குலத்தை தாக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்றும் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் எனவும் WHO தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியசஸ் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பெருந்தொற்றுகளும், உயிர்கொல்லி நோய்கள் திடீரென தோன்றுவதும் வாழ்க்கையின் யதார்த்தங்கள் என்றார். அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள இப்போதுள்ளதை விட அதிக தயார் நிலையில் நாம் இருப்பதுடன், அதை சிறந்த முறையில் சமாளிக்கும் வகையில் நாடுகள், பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.