Breaking News

இலங்கையில் மேலும் 293 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - விபரம் வெளியீடு!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இருப்பவர்கள் என்பதோடு, ஏனைய 291 பேரும் திவுலபிடிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையின் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.