Breaking News

இலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு!


இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.  

இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அத்துடன் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும் சிலேவ் ஐலென்ட் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 

75 வயதுடைய பெண் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக சுகயீனத்துடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், விசேட தேவையுடைய 19 இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.