Breaking News

இலங்கையில் சற்றுமுன் 609 பேருக்கு கொரோனா - விபரம் வெளியீடு


இலங்கையில் மேலும் 609 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 25 பேருக்கும், பேருவலை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 20 பேருக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.