Breaking News

கொழும்பில் கொரோனா வைரஸ் பதிவான இடங்கள்!


நேற்று (22) அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

நேற்று மொத்தமாக 309 பேர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களில் 188 பேர் பெலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்துடன் தொடர்புடையவர்களாவர்.  

பெலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்துடன் இணைந்தாக கொழும்பில் பதிவான தொற்றாளர்கள் சம்பந்தமான விபரம்...  

கொழும்பு – 79 
கடுவெல – 06 
தெமட்டகொட் - 15 
மொறட்டுவ – 03 
கொட்டாஞ்சேனை – 04 
வெல்லப்பிட்டியவில் - 09 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.  

இதேவேளை, நேற்று மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்.  

கொழும்பு – 14 
கொட்டாஞ்சேனை – 07 
முல்லேரியாவ – 04 
கிரேண்பாஸ் - 04 
புளுமெண்டல் - 01 
தெஹிவளை – 01  

கம்பஹா மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்  

கம்பஹா – 08 
வத்தளை – 02 ராகம – 01 
மினுவாங்கொட – 14 
திவுலப்பிட்டிய – 05 
கட்டுநாயக்க – 10  

காலி மாவட்டத்தில் அவுங்கலையில் 8 பேரும், இந்துரவ பகுதியில் ஒருவரும், மாத்தறையில் ஒருவரும், குளியாபிட்டியில் 14 பேரும், அநுராதபுரத்தில் இருவர் தொற்றுக்குள்ளனதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.