கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்ற பெண் சுற்றித்திரிந்த இடங்கள் தொடர்பில் விசாரணை!
கொரோனா நோய் தொற்றுடன் ஐ.டிஎச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண் சென்றிருந்த இடங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐடிஎச் மருத்துவமனையில் இருந்து தமது இரண்டரை வயதான குழந்தையுடன் குறித்த பெண் தப்பிச் சென்றார்
எஹெலியகொட யாய வீதியில் உள்ள அவரது இல்லத்தில் குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டு இருந்தபோதும் இரண்டு தினங்களாக அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு எஹெலியகொடயில் உள்ள பிரதேச மக்களால் அவர் பிடிக்கப்பட்டு சுகாதார தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக சென்ற இடங்களின் வழிதடங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.