Breaking News

நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

 


இலங்கையில் மேலும் 1.297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைந்து இன்றையதினம்  (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 இலட்சத்து 32 ஆயிரத்து 38 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.