Breaking News

நாட்டில் மேலும் அதிகரித்தது கொரோனா மரண எண்ணிக்கை!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 42 ஆண்களும் 30 பெண்களும்  உள்ளடங்குவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம்  மாத்திரம் 1 ஆயிரத்து 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 10 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மேலும் 16 ஆயிரத்து 720 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 45 ஆயிரத்து 922 பேர் , கொரோனா வைரஸ் தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.