Breaking News

வடமாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர்கள்!

 


இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்  மற்றும்   வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றையதினம்  (செவ்வாய்க்கிழமை) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக  போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.