Breaking News

சீன தூதரகத்தால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட மக்கள் வங்கி!

 


இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலிற்கு உட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கும் சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.