Breaking News

நாட்டில் மேலும் 22 கொரோனா மரணங்கள் பதிவு!

 


இலங்கையில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்றினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 09 பெண்களும் 13 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.