Breaking News

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு!



கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 51 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 23 ஆயிரத்து 929 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 13 ஆயிரத்து 442 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.