Breaking News

பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும் நாளை மறுதினமும் வேலை நிறுத்தம்!

 

பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்களும் நாளை மற்றும் நாளை மறுதினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலை நிறுத்தம் தொடர்பில் பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.