Breaking News

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றினைந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.