இன்றைய தினத்திற்குள் இராஜினாமா கடிதம்- கோட்டாபய !
இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த ரூபவாஹினி அலைவரிசை மீண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
மேலும், சுயாதீன தொலைக்காட்சி சேவையானது தற்போது ஒளிபரப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.