Breaking News

நல்லூர் கந்தசுவாமியின் தீர்த்தோற்சவம்!

 

 

 வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் ஷண்முக தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமானும், வெள்ளி எருது வாகனத்தில் சடேஸ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி, தெய்வயானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் தீர்த்தோற்சவ உற்சவத்தினை கண்டுகளித்தனர்.