Breaking News

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

 


அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கடுகொட பிரதேசத்தில் களனிவௌி ரயில் வீதியில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் இவ்வாறு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக களனிவௌி ரயில் வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக களனிவௌி ரயில் வீதியில் ரயில் போக்குவரத்து தாமதமடைக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.