Breaking News

வடக்கு கிழக்கில் 25 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு!

 


எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றையதினம்  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே சின்ஹாவிடயம்  விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.