Breaking News

"விஜய் பேசியது எனக்குத்தான் வலிமை சேர்க்கும் " சீமான் பேச்சு!

 


அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற. எங்களுக்கு இடையேயான பந்தம் அண்ணன்-தம்பி மட்டும் தான். நான் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார். அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.